सन्तः श्रीरङ्गपृथ्वीश चरणत्राणशेखराः।
जयन्ति भुवनत्राण पदपङ्कजरेणवः॥
भरताय परं नमोऽस्तु तस्मै प्रथमोदाहरणाय भक्तिभाजाम् ।
यदुपज्ञमशेषतः पृथिव्यां प्रथितो राघवपादुकाप्रभावः ।।
பாதுகா பரபாவத்தைப் பாரோர் அறிய பறைசாற்றிய பெருமை பரதாழ்வானுக்கே பொருந்தும்.
உலகிலேயே மிகச்சிறந்த ஸ்தோத்ர க்ரந்தபடைப்பு நம் ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்வாமி தேசிகன் அருளிய பாதுகா ஸஹஸ்ரம் என்றால் அது மிகையில்லை.
அந்த பாதுகா ப்ரபாவத்திலிருந்து சிலவற்றை இங்கே அனுபவிப்போம்.
சிலை அணங்குமிழ்ந்தது ராமன்பாத தூளியால்!
வாலில் வைத்த அக்னி குளிர்ந்தது பிராட்டியின் க்ருபையால் ஹனுமனுக்கு!
புல் அஸ்த்ரமாகி கண்ணழிவு செய்தது காக்கைக்கு!
பாதுகாதேவி ராம ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து பதிநான்காண்டுகள் சீரிய ராஜ்ய பரிபாலனம் செய்த மகத்துவம் முன்னே மொழிந்தவற்றைவிட வியப்பும் ஏற்றமும் பெற்றதன்றோ!
சத்ரம்,சாமரம், பாதுகை ஆகியன எம்பெருமானுக்கு உபகரணங்களாகின்றன.
இவற்றுள் பாதுகா ஸிம்ஹாஸனத்தில் அமரவும் அவருக்கு சத்ர சாமரம் உபகரணங்களாயின. இது பாதுகாவின் ஓர் அஸாத்ய ப்ரபாவமன்றோ!!
ராமபிரானை அயோத்திக்குத் திரும்ப அழைத்துச் செல்வதில் மிக்க உறுதியுடன் இருந்தான் பரதன். ஆனால் அவன் முயற்சி பலிக்கவில்லை. தன்னை அரசனாக்க ராமன் உள்பட அனைவரின் வேண்டுகோளையும் புறந்தள்ளிய பரதாழ்வான் பாதுகை அரசாள்வதை சிரமேற்கொண்டது பாதுகாவின் சிறப்பினாலன்றோ!!!
வானோர் வாழ மரவடியைத் தம்பிக்கு
வான் பணயம் வைத்தான் ராமபிரான்.
பணயமாகிய பாதுகை மாட்சி மிக்க ஆட்சி செய்த சீர்மைதான் என்னே!!!!
திருவடியைக்காட்டிலும் பரதநம்பிக்கு அவனீந்த அடிநிலை மிக்க மதிப்புடையதாகியது ஆச்சர்யமல்லவோ !
செல்வச் செழிப்பு, கல்வி, கலை, ப்ரஜைகளின் மகிழ்ச்சி, ஆசார்யாராதனை ஆகிய அனைத்திலும் சிறப்புற்றிருந்தது பாதுகாராஜ்யமே!!!!!
தந்தை சொற்கேட்டு வனம் சேர்ந்து தசரதன் சத்யம் காத்தான் ராமபிரான்.
அந்த எம்பெருமான் வாக்கைக் காப்பாற்றத் தானே அவனது ப்ரதிநிதியாக பரதனுடன் சென்று செயற்கரிய செயலைச் செய்தது பாதுகையன்றோ!!!!!!
ஸேஷத்வத்தில் சிறந்தவன் லக்ஷ்மணன். தமையனுக்கு கைங்கர்யம் செய்யவே பிறந்தவன் அவன். பாரதந்த்ரனாகிய பரதன் ராமன் இட்ட வழக்காயிருந்தவன். ஆனால் அண்ணல் நாடாளச்சொன்னதை மறுத்தான். ஆக பரதனின் பாரதந்த்ரயத்தில் சற்றே குறை ஏற்பட்டதெனத் தோன்றலாம். ஆனால் காட்டுக்குப்போ என்றதும் போகி பின் ஸிம்ஹாஸனத்தில் ஏறு என்றதும் ஏறி ராமபட்டாபிஷேகமான பின் திரும்ப பெருமான் திருவடிகீழ் தஞ்சம் புகுந்த பாதுகாஸ்ரீயின் பாரதந்த்ர்ய நிலை எல்லோரினும் மேம்பட்டதன்றோ!!!!!!!
கஜேந்த்ரன் கதறலுக்கு அன்று கனிந்த ஆதிமூலம் இன்று பரதன் கண்ணீருக்கு இரங்கவில்லையே!
கன்றின் குரலுக்கு ஓடிவரும் தாய்பசுப்போல திருவடியை விட்டு தனயனுக்குத் தஞ்சமளித்து அனுக்ரஹித்த அன்னை பாதுகா தேவி சுயநலத்தைவிட தேசநலம் காக்கப்புறப்பட்டநிலை மிக உயர்ந்ததன்றோ!!!!!!!!
நாவினால் சுட்டவடு ஆறுமோ?ஆற்றிக்காட்டியவர் பாதுகா தேவி.
செய்யாத தவறுக்காகப் பழியைச்சுமந்தவன் பரதன். கௌஸல்யா,
தசரதன், லக்ஷ்மணன், குஹன், பரத்வாஜமுனி, அயோத்தி மக்கள் வரை பேசிய இழிச்சொற்கள் அனைத்தையும் சுமந்தான். என்னே அதிசயம்! பாதுககையைத் தரித்த அக்கணத்திலிருந்து இகழ்ச்சியனைத்தும் புகழ்ச்சியாயின.
தலை எழுத்தையே மாற்றிக்காட்டும் ஆற்றல் உடைவராயிற்றே பாதுகாதேவி!!!!!!!!!
அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைவரையும் எம்பெருமான் திருவடிகளுடன் சேர்க்கும் சடகோபமாகிய பாதுகா தேவியின் பெருமைகள் பேசி மாளாது என்பதே நிதர்ஸனமாகிறது.
இத்தகைய ப்ரபாவங்களடங்கிய பாதுகா ஸஹஸ்ரம் என்ற நிதியாகிய க்ரந்த்தத்தை நாமனைவரும் பாராயணம் செய்து இந்த பவக் கடலைக் கடக்க முயல்வோமாக.
(ஸ்ரீ.உ.வே. நாவல்பாக்கம் வாஸுதேவாச்சார்யாரின் ஸமீபத்திய உத்தமூர் ஸ்வாமி திருநக்ஷத்ரத்தை ஒட்டிய உபன்யாஸத்திலிருந்து தொகுத்தது)