Showing posts with label #Nyaasa Vimshati. Show all posts
Showing posts with label #Nyaasa Vimshati. Show all posts

Sunday, September 11, 2022

ந்யாஸ த்ரயீ - Part 5 - Nyaasa Vimshati



Shloka - 16: 

आदेष्टुं स्वप्रपत्तिं तदनुगुणगुणाद्यन्वितं स्वं मुकुन्दो 
मामित्युक्त्वैकशब्दं वदति तदुचितं तत्र तात्पर्यमूह्यम् । 
तत्प्राप्य प्रापकैक्यं सकलफलदतां न्यासतोऽन्यानपेक्षाम् 
प्राधान्याद्यं च किञ्चित् प्रथयति स परं श्रीसखे मुक्त्युपाये ॥ १६॥

சரமஶ்லோகத்தின் முற்பகுதி அனுவாதம் (நம் நிலைமையை எடுத்துச் சொல்கிறது‌) பின்பகுதி (விதிக்கிறது) கட்டளையாகிறது..
"மாம் ஏகம்"--தேர்த்தட்டில் நிற்கும் கண்ணன் தன்நெஞ்சைத் தொட்டு "மாம்" என்கிறான். வாத்ஸல்யம், கருணை முதலிய எண்ணற்ற கல்யாண குணங்களையுடைய என் ஒருவனையே என்பதை "ஏகம்" என்ற பதம் சொல்கிறது.
பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் ஒருவனே உபாயமாகவும், உபேயமாகவும் ஆவதை இந்த "ஏகம்"- என்ற பதம் குறிக்கிறது. இதுவே ப்ராப்ய, ப்ராபக ஐக்யம். ப்ரபத்தியைச் செய்யும் சேதனன்
(வேறு உபாயங்கள் செய்யச் சக்தியற்ற) விஷயத்தில் தானே நின்று பலன் தருகிறான்.
எம்பெருமான் ஒருவனே மோக்ஷோபாயன் என்ற உணர்வு ப்ரபன்னனுக்கு அவஶ்யம்.
ப்ரபத்தி ஒரு வ்யாஜமாகி எம்பெருமானின் சீற்றத்தைத் தணித்து சேதனனுக்குப் பலன் தருகிறது. ஆக எம்பெருமான் ஒருவனே ஸித்தோபாயனாயிருந்து மோக்ஷம் தர வல்லவன்.
இதற்கான அதிகார ஸங்க்ரஹ பாசுரம்.
"சாதனமும் நற்பயனும் நானே ஆவன் 
சாதகனும் என் வசமாய் என்னைப் பற்றும்* 
சாதனமும் சரணநெறி அன்று உமக்கு
சாதனங்கள் இந்நிலைக்கு ஓர் இடையில் நில்லா*
வேதனைசேர் வேறங்கம் இதனில் வேண்டா
வேறு எல்லாம் நிற்கும் நிலை நானே நிற்பன்*
தூதனுமாம் நாதனுமாம் என்னைப் பற்றிச் சோகம் தீர்
என் உரைத்தான் சூழ்கின்றானே".
(அதி-ஸ 48)

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 17

स्वाभीष्टप्राप्तिहेतुः स्वयमिह पुरुषैः स्वीकृतः स्यादुपायः 
शास्त्रे लोके च सिद्धः स पुनरुभयथा सिद्धसाध्यप्रभेदात् । 
सिद्धोपायस्तु मुक्तौ निरवधिकदयः श्रीसखः सर्वशक्तिः 
साध्योपायस्तु भक्तिर्न्यसनमिति पृथक् तद्वशीकारसिद्ध्यै ॥ १७॥

உபாயம் என்றால் என்ன?அதன் வகைகள் என்ன?அதனை ஏன் செய்யவேண்டும் என்பதை இதில் விவரிக்கிறார் ஸ்வாமி.
இவ்வுலகில் சேதநன் ஒரு பலனை அடைய விரும்பிச் செய்யும் க்ரியைக்கு உபாயம் என்று பெயர்  இது ஸித்தோபாயம், ஸாத்யோபாயம் என இருவகைப்படும். நம்மால் செய்யப் பட வேண்டாத முன்பே உள்ள ஸாதனம் ஸித்தோபாயம்.
நாம் முயன்று செய்வது ஸாத்யோபாயம். உதாரணமாக மரத்தில் பழுத்திருக்கும் பழம் ஸித்தோபாயம்.அதனைச்சென்று பறித்துப் பயனடைதல் ஸாத்யோபாயம்.
கருணையும்,சக்தியுமுள்ள எம்பெருமானே ஸித்தோபாயம்.
அவனை அடைய சேதநன் செய்யும் ப்ரபத்தி ஸாத்யோபாயம்.
பக்தி யோகம்,ப்ரபத்தி என்ற இரண்டுமே ஸாத்யோபாயம்.
இவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்து  எம்பெருமானை வசப்படுத்திக் பெறுகின்ற பலனே மோக்ஷம்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌼🌼🌺🌺🌺🌼🌼


Shloka -18
अत्यन्ताकिञ्चनोऽहं त्वदपचरणतः सन्निवृत्तोऽद्य नाथ 
त्वत्सेवैकान्तधीः स्यां त्वमसि शरणमित्यध्यवस्यामि गाढम् । 
त्वम् मे गोपायिता स्यास्त्वयि निहितभरओऽस्म्येवमित्यर्पितात्मा 
यस्मै स न्यस्तभारः सकृदथ तु सदा न प्रयस्येत् तदर्थम् ॥ १८॥

ஆறு அங்கங்களுடன் கூடிய  ப்ரபத்தியை ஒருமுறை செய்தபின் ப்ரபன்னன் செய்யவேண்டியது வேறொன்றுமில்லை என இதில் வலியுறுத்துகிறார் ஸ்வாமி.
ப்ரபத்திக்கான ப்ரயோக விதி இங்கு சொல்லப்படுகிறது.
  1. அடியேன் வேறு உபாயத்தைச் செய்யும் சக்தியற்றவன். இதுவே கார்ப்பண்யம் என்னும் அங்கம் .
  2. உன் திருவுள்ளம் உகக்காத செயலில்  ஈடுபடமாட்டேன்.(ப்ராதிகூல்ய வர்ஜனம்)
  3. உன் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யத்தில்  ஈடுபடுவேன் (ஆநுகூல்ய ஸங்கல்பம்)
  4. நீயே என்னைக் காப்பாய் என்ற முழு நம்பிக்கையுடனுள்ளேன்.(மஹா விஶ்வாஸம்)
  5.  நீயே எனக்கு உபாயமாக இருந்து காக்கவேண்டும் (கோப்த்ருத்வ வரணம்)
இவ்விதமாக என் ஸ்வரூபத்தையும், அதனைக்காக்கும் பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று ஒரு முறை செய்யும் ப்ரபத்திக்குப்பின் எக்காலத்திலும் இப்ரபன்னன் எம்முயற்சியும் செய்ய வேண்டாம்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 19

त्यक्त्वोपायानपायानपि परमजहन्मध्यमां स्वार्हवृत्तिम् 
प्रायश्चित्तं च योग्यं विगतऋणततिर्द्वन्द्ववात्यां तितिक्षुः । 
भक्तिज्ञानादिवृद्धिं परिचरणगुणान् सत्समृद्धिं च युक्तां
नित्यं याचेदनन्यस्तदपि भगवतस्तस्य यद्वाऽऽप्तवर्गात् ॥ १९॥

ஶரணாகதி செய்து முடித்தபின் ஒருவனது அனுஷ்டானங்களை விவரிக்கும் ஶ்லோகம் இது.
ஶரணாகதிக்குப்பின் அதற்கேற்ப தன் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ளுதல் அவஶ்யம்.

1 &2 த்யக்த்வோபாயானபாயாந்---
ப்ரபத்தி செய்து முடித்த ஒருவன் காம்ய பலன்களை அடைவதற்கான கார்யங்களைச் செய்யக்கூடாது. ஶரணாகதிக்கு எதிரான (அபாயம்) பாபமான கார்யங்களை விடவேண்டும். செய்யாதன செய்யோம் என ஆண்டாள் சொல்கிறாள். முக்யமாக பகவத் பாகவதாபசாரம் கூடாது.

3. மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்---
நடுநிலையாகவுள்ள நிதயகர்மானுஷ்டங்களை ஶ்ரத்தையுடன் செய்யவேண்டும்.

4. ப்ராயச்சித்தம்ச அஜஹத்--
நம் மையும் மீறி ஏற்படும் தவறுகளுக்கு உரிய  ப்ராயச்சித்தம் செய்தல் வேண்டும்.

5. விகத ருண ததி ----
மனிதனுக்கு ஏற்படும் மூன்று கடன்களாகிய தேவ, ரிஷி, பிதுர் கடன்களை முறையே வேள்வி செய்தல், வேதம் கற்றல், விவாஹம் செய்து புத்ரபேறு பெறுதல் மூலமாகத் தீர்க்கலாம் என சாஸ்த்ரம் சொல்கிறது. ஆனால் ப்ரபத்தி செய்தவனுக்கு அவ்வுபாயமே 
இக்கடன்களை நீக்கி விடுகின்றது. ப்ரபத்தியின் பெருமையால் அவன் இக்கடன்களிலிருந்து விடுபடுகின்றான். இதனையே
"தேவாதீனாமய மந்ருணதாம் தேஹவத்வேபிவிந்தந்" என்ற தயாஶதக ஶ்லோகத்தில் (49) ஸ்வாமி காட்டுகிறார்.

6. த்வந்த்வ வாத்யாம் திதுக்ஷு: ---
ஸுக துக்கங்களாகிய சுழற்காற்றை சகித்துக் கொள்பவனாயிருக்கவேணும். கைங்கர்யத்துக்கு ஸுகத்தையும்,ப்ராரப்தம் கழிய துக்கத்தையும் கருவியாகக் கொள்ள வேண்டும்.

7. பக்தி ஞானாதி வ்ருத்திம்----
பக்தி, ஞானம், வைராக்யம் வளர வேணும் என்ற எம்பெருமானிடம் ப்ரார்த்திக்கவேண்டும். "பகவன் பக்திமபி ப்ரயச்சமே" என்கிறார் ஆளவந்தார்.

8. பரிசரண குணான் ஸத்ஸம்ருத்திம்ச யுக்தாம்---
சாதுக்களின் சேர்க்கையையும், கைங்கர்யத் துக்கான சாதனங்களின் செழிப்பையும்  தரும்படி எம்பெருமானிடம்/ஆசார்யனிடம் ப்ரார்த்திக்கவேணும்.
ஆக இந்த ஸ்தோத்ரமே  பாராயணத்துக்கு உரியதாயினும், பரிபாலனம் செய்ய உதவும் வகையில் உயர்ந்தாயுள்ளது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 20

आज्ञा कैङ्कर्यवृत्तिष्वनघ गुरुजनप्रक्रिया नेमिवृत्तिः 
स्वार्हानुज्ञातसेवा विधिषु च शकने यावदिष्तं प्रवृत्तः । 
कर्मप्रारब्धकार्यं प्रपदनमहिमध्वस्तशेषं द्विरूपं 
भुक्त्वा स्वाभीष्टकाले विशति भगवतः पादमूलं प्रपन्नः ॥ २०॥
 
ப்ரபன்னன் அவன் விரும்பிய காலத்தில் மோக்ஷம் பெறுவதை இந்த ஶ்லோகம் சொல்கிறது.
உபாயங்களை உபாயமாகச் செய்யாமல் பகவத் ப்ரீத்யர்த்தமாக ஸங்கல்பித்துக்கொண்டு செய்யும்போது பலனும் அவனுக்கே ஸங்கல்பமாகும் வைபவமுண்டு என்கிறார் ஸ்வாமி  தேஶிகன். இதற்கு ஸாத்விக த்யாகம் என்றும் பெயர். 

ப்ரபன்னன் செய்யும் கைங்கர்யம் ஆக்ஞா கைங்கர்யம் அநுக்ஞா கைங்கர்யம் என இருவகைப்படும். ஆக்ஞா கைங்கர்யம் எம்பெருமானிட்ட கட்டளையாக அவனுகப்புக்கு குற்றமற்ற நம் ஆசார்யர்கள் அனுஷ்டித்தபடி வண்டிச் சக்ரமுருளும் வகையில் செய்யவேண்டும். "ஆக்ஞா கைங்கர்ய வ்ருத்திஷூ அநக குருஜன ப்ரக்ரியா நேமி வ்ருத்தி:"
என்கிறார் (ஸ்நானம், சந்த்யாவந்தனம், ஆராதனம், தர்ப்பணம் முதலியன இதிலடங்கும்)

அனுக்ஞா கைங்கர்யம் எம்பெருமானின் கட்டளையல்ல. அவன் அனுமதித்து ஏற்கும் கைங்கர்யம்.
நம்மால் முடிந்ததை விரும்பி ஏற்றுக் செய்யலாம் (புஷ்பம் தொடுத்தல், கோயிலில் கோலமிடுதல், ப்ரதக்ஷிணம் செய்தல் முதலியன இதில் அடங்கும்.)
சேதனனுக்கு ஸஞ்சிதம், ப்ராரப்தம் என இரு கர்மாக்களுண்டு.
பல ஜன்மாக்களாகச் சேர்க்கப்பட்ட பாபக் குவியல்கள்
ஸஞ்சித பாபம்.
அவற்றுள் பலன்கொடுக்க ஆரம்பித்துள்ளது ப்ராரப்த பாபம்.
சேதனன் ஶரணாகதி செய்தவுடன் ஸஞ்சித பாபம் அழிகின்றன. ப்ராரப்த கர்மா இந்த தேகம் விழும் வரை அனுபவித்து முடியும். ஆக புண்ய பாபங்கள் முற்றிலும் கழிந்தவனாய் அவன் விரும்பிய காலத்தில் மோக்ஷம் பெறுகிறான்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 21

श्रुत्या स्मृत्यादिभिश्च स्वयमिह भगवद्वाक्यवर्गैश्च सिद्धां
स्वातन्त्र्ये पारतन्त्र्येऽप्यनितरगतिभिः सद्भिरास्थीयमानाम् ।
वेदान्ताचार्य इत्थं विविधगुरुजनग्रन्थसंवादवत्या
विंशत्या न्यासविद्यां व्यवृणुत सुधियां श्रेयसे वेङ्कटेशः ॥ २१॥

இஹ, பர சுகங்களை அளிக்கவல்லது இந்த ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரம் என்கிறார் ஸ்வாமி.
வேதத்தாலும் (ஶ்ருத்ய), ஸ்ம்ருதி (ஸ்ம்ருதி ஆதிபி:ச) யாலும், எம்பெருமான் வாக்காலும் (ஸ்வயம் பகவத் வாக்ய வர்க்கை:ச) ந்யாஸத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இவை மிக ஶ்ரேஷ்டமான ப்ரமாணங்கள்.

ஸ்வதந்த்ரமான நிலையிலும் (ஸ்வாதந்த்ர்யே) அங்கமான நிலையிலும் (பாரதந்த்ர்யே அபி) அகிஞ்சனர்களாகிய பெரியோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது இந்த ப்ரபத்தி வித்யை. ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்திலும் ந்யாஸம் விவரிக்கப்பட்டுள்ளது.
வேதாந்தாசார்யன் என முடிசூடிய ஸ்வாமி தேஶிகன்
பூர்வாசார்யர்கள் ப்ரபத்தி பற்றி
சொல்லிய விஷயங்களைத் தழுவிய இந்த
ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரத்தை நமக்காக அருளியுள்ளார்.
(உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே --நம்மாழ்வார் ) 
(த்வத்பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே--ஆளவந்தார்)
(அஶரண்ய ஶரண்யாம் அனன்ய ஶரண: - பாஷ்யகாரர்)


🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 22

संसारावर्तवेगप्रशमनशुभदृग्देशिक प्रेक्षितोऽहं
संत्यक्तोऽन्यैर् उपायैरनुचितचरितेष्वद्य शान्ताभिसन्धिः ।
निःशङ्कस्तत्वदृष्ट्या निरवधिकदयं प्रार्थ्य संरक्षकं त्वां
न्यस्य त्वत्पादपद्मे वरद निजभरं निर्भरो निर्भयोऽस्मि ॥ २२॥

ப்ரபன்னன் அனுஸந்திக்க வேண்டிய முறையை ஸ்வாமி அனுஸந்தானம் செய்து காட்டும் ஶ்லோகம் இது.
ஹே பேரருளாளப் பெருமானே!
இந்த ஸம்சாரம் என்ற நீர்சுழலின் வேகத்தைத் தடுக்கவல்ல (ஸம்ஸார வர்த்தக வேக ப்ரஶமன)
ஆசார்யனின் நல்ல கடாக்ஷத்தைப் பெற்றவனாக (ஶுப த்ருக் தேசிக ப்ரேக்ஷித:)
பிற உபாயங்களிலிருந்து விடுபட்ட வனாக (அந்யை: உபாயை: ஸந்த்யக்த:)
தகாத செயல்களில் ஈடுபடாத வனாக (அனுசித சரிதேஷு ஶாந்தாபிஶந்தி:)
பூர்ண விஶ்வாஸத்துடன் தத்வ ஞானத்தால் சந்தேகமின்றி (தத்வ த்ருஷ்ட்யா நிஶ்ஶங்க)
எல்லையற்ற கருணைக்கடலான உன்னை உபாயமாக ப்ரார்த்தித்து
(நிரவதிக தயம் த்வாம் ஸம்ரக்ஷகம் ப்ரார்த்தய)
உன் திருவடித் தாமரையில் என்பரத்தை ஒப்படைத்துவிட்டு
பொறுப்பும் பயமும் நீங்கியவனாக இருக்கிறேன் என்கிறார் ஸ்வாமி.
(த்வத் பாத பத்மே வரத நிஜபரம் நிர்பரோ நிர்பயோஸ்மி)
மேற்கூறிய விஷயங்களை மோக்ஷத்தை விரும்பும் சேதனர்களாகிய நாம் அநுஸந்தானம் செய்ய வேண்டும் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
                               🙏🙏(Nyaasa VimShati Concluded)🙏🙏



Friday, September 9, 2022

ந்யாஸ த்ரயீ - Part 4 - Nyaasa Vimshati


Shloka - 11

यत्किञ्चिद्रक्षणीयं तदवन निपुणे न्यस्यतोऽकिञ्चनस्य 
प्रस्पष्टं लोकदृष्ट्याऽप्यवगमित इह प्रार्थनादङ्गयोगः । 
तस्मात् कर्माङ्गकत्वं व्यपनयति परापेक्षणाभाववादः 
साङ्गे त्वष्टाङ्गयोगव्यवहृति नयतः षड्विधत्वोपचारः ॥ ११॥


ப்ரபத்திக்கு அங்கங்களுடைமை பற்றி விளக்கும் ஶ்லோகம் இது.
சாதாரண லௌகீக பலன்களைப்பெறவே பல ப்ரார்த்தனைகளை முன்வைக்கும்போது மிக உயர்ந்த மோக்ஷ பலனைத் தர வல்ல ப்ரபத்திக்கு அங்கங்கள் அவஶ்யம் என்கிறார் ஸ்வாமி.
பக்தியோகத்துக்கு ஶரணாகதி அங்கமாயிருக்கும் என்று கீதாபாஷ்யத்தில் சொல்கிறார் உடையவர் .த்யானம் நல்ல விதமாய் நடைபெற ஶரணாகதி அங்கமாகிறது இது "அங்க ஶரணாகதி" எனப்படும். சகல பலன்களையும் தரவல்லது ஶரணாகதி என்கிறார் உடையவர் கத்யத்ரயத்தில். வேதம், இதிகாச புராணங்கள், ப்ரும்ஹ சூத்ரம், பகவத்கீதை ஆகியவற்றுள் சொல்லப்பட்டுள்ள தர்மமே ஶரணாகதி.
இதற்கு 6 அங்கங்கள் உள்ளன என்று ஆகம க்ரந்தங்கள் கூறுகின்றன.
1. ஆனுகூல்ய ஸங்கல்பம்.
2. ப்ராதிகூல்ய வர்ஜனம்.
3. மஹாவிஸ்வாஸம்.
4. கோப்த்ருத்வவர்ணம் (கதியில்லாத்தன்மை)
5. கார்பண்யம் (எம்பெருமானே ரக்ஷகன்என வரித்தல்)

இந்த ஐந்தையும் உறுப்பாகக் கொண்டு ஆத்மாவை ஸமர்ப்பித்தால் அது "அங்கி"யாகிறது. த்ரிஜடை, விபீஷண ஶரணாகதிகள் இந்த ஆறு அங்கங்களுடன் கூடிய பூர்ண ஶரணாகதி என்கிறார் ஸ்வாமி.
அங்கங்கள் பற்றி எழும்3சந்தேகங்களுக்கு ஸ்வாமி ஸமாதானம் சொல்கிறார்.

1. ஶரணாகதிக்கு அங்கங்கள் தேவையா? ஆத்மாவை ஒப்படைக்கும் பர ஸமர்ப்பணத்திற்கு அங்கங்கள் அவஶ்யம்.
2. ஶரணாகதிக்கு அங்கங்கள் தேவையில்லை என்கிறார்களே?

ஸாஸ்த்ர ரீதியாகவும் ப்ரபத்திக்கு அங்கங்கள் தேவை. இவை இருவகைப்படும். அந்தரங்கம்என்பது உள்ளிருந்து செய்யும் உபகாரம் பஹிரங்கம் என்பது யக்ஞம், தானம், தபஸ் ஆகியன. இவை வெளிஅங்கங்கள் இத்தகைய வெளி அங்கங்கள் பக்தியோகத்துக்கு உள்ளவை. ப்ரபத்திக்கு அந்தரங்கம் மட்டுமே.
ஆத்மா, அதன் ரக்ஷணம், அதன் பலன் மூன்றையும் ஒப்படைத்தல் அங்கியாகிறது.இதனையே ஆறு விதம் கொண்ட ஶரணாகதி என்று ஆசார்யர்கள் விளக்கியுள்ளனர்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼


Shloka 12:

पञ्चाप्यङ्गान्यभिज्ञाः प्रणिजगुरविनाभाव भाञ्चि प्रपत्तेः 
कैश्चित् संभावितत्वं यदिह निगदितं तत् प्रपत्त्युत्तरं स्यात् । 
अङ्गेष्वङ्गित्ववादः फलकथनमिह द्वित्रिमात्रोक्तयश्च 
प्राशस्त्यं तत्र तत्र प्रणिदधति ततः सर्ववाक्यैककण्ठ्यम् ॥ १२॥

அங்கங்கள்,அங்கி இவற்றில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றின் தீர்வும் இதிலடங்கும்.
முதல் சந்தேகம் - எல்லா அங்கங்களுடன் ப்ரபத்தி அனுஷ்ட்டிக்கவேண்டுமா அல்லது சிலதை விடலாமா?என்பது.
கட்டாயம் ப்ரபத்தி ஆறுஅங்கங்களுடன் அனுஷ்ட்டிக்க வேணும் என ஆசார்யர்கள் சொல்லியுள்ளனர்.

இரண்டாம் சந்தேகம் - எல்லா அங்கங்களும் ஸம்பவிக்குமா?என்பது. ப்ரபத்தி சமயத்தில் எல்லாம் ஸம்பவிக்கலாம் அல்லது அதன்பிறகும் ஸம்பவிக்கலாம்.
அங்கங்களின் நிறை /குறை ப்ரபத்தியின் பலனை பாதிக்காது ஆனால் நம் ஸ்வரூபத்துக்கேற்ப இவைகளை கைகொள்ளுதல் அவஶ்யம்.

மூன்றாம் சந்தேகம் - அங்கங்களையே அங்கியாகச் சொல்வதன் தாத்பர்யம் என்ன?"விஸ்வாஸ:ஶரணாகதி"-- என்கிறார் பாஷ்யகாரர். "ப்ரார்த்தனா ஶரணாகதி" --போன்ற வசனங்கள் அந்த அங்கங்களின் முக்யத்வத்தையும், பெருமையையும் தெரிவிக்கும் பொருட்டு ஏற்பட்டவை."கருடோத்ஸவமே ப்ரும்ஹோத்ஸவம்"--என்பது
போல ப்ராதன்யத்தை வலியுறுத்தவே இந்த வசனங்கள்.ஆக ஐந்து அங்கங்களுடன் செய்யும்போதுதான் ப்ரபத்தியாகிய அங்கி நிறைவேறுகிறது என ப்ரபத்தி ஶாஸ்த்ரம் நன்கறிந்த பெரியோர்கள் நிர்ணயித்துள்ளனர்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼


Shloka - 13:

रक्षोपेक्षा स्वसाह्य प्रणयवति भरन्यास आज्ञादि दक्षे 
दृष्टा नाऽत्र प्रपत्ति व्यवहृतिरिह तन्मेलने लक्षणं स्यात् । 
गेहागत्यदि मात्रे निपततु शरणागत्यभिख्योपचारात् 
यद्वानेकार्थभावाद्भवति च विविधः पालनीयत्वहेतुः ॥ १३॥


ப்ரபத்தியின் லக்ஷணத்தை ஆராய்ந்து தெளிவுபடுத்தும் ஶ்லோகம் இது.
விளையாட்டு ப்ராயத்திலிருக்கும் பாலகன் உபநயனம் ஆனபின்
காயத்ரி மந்த்ரோபதேஸம், சந்த்யாவந்தனம் முதலான அனுஷ்டானங்களால் தேஜஸ்வியாகிறான். இதேபோல ஸமாஶ்ரயேணம், பரந்யாஸம் என்னும் அனுஷ்டானங்களும்
மிகுந்த கவுரவம் உடையன. இந்த அனுஷ்டானங்கள் எம்பெருமானுக்கு தாஸன் என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவை. 

ஜன்மாந்த்ர ஸுஹ்ருதத்தினால் ஆசார்ய ஸம்பந்தம் ஏற்பட்டு இந்த அனுஷ்டானங்கள் ப்ராப்தமாகின்றன. இது சாதாரண நிகழ்வல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவன் தன் ஆத்மாவையும் அதனைக் காப்பாற்றும் பொறுப்பையும் எம்பெருமானிடம் ஒப்படைப்பதே ஶரணாகதி என்பதாகும்.ஆத்மாவைக் காப்பாற்றுதல் என்பதற்கு அடுத்த ஜென்மம் ஏற்படாதவாறு முடிவு
செய்தல் என்று அர்த்தம்.
இதில் ப்ரார்த்தனை+ஆத்மரக்ஷணம் இரண்டும் அடங்கும். இவை தனித்தனியே ஶரணாகதியாகாது. பரஸ்பர உபகாரம்தானே நட்பின் லக்ஷணம். பொறுப்பை நாம் முழுதுமாய் விடவேண்டும்.
"இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போல"-- என்ற த்ரௌபதி ஶரணாகதி வேறு கதியில்லாத, கைமுதலில்லாத ஶரணாகதி. ப்ரார்த்தனையை முன்னிட்டுச் செய்வது.
"ஶரணம்"- என்றால் உபாயம், ரக்ஷகன், வீடு என்று பொருள். 
"ஆகதி"- என்றால் வருதல்,அடைதல் என்று பொருள்.
அர்ச்சையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் செல்வதே பரந்யாசம் என்று சொல்வது உபசாரவழக்காகும்.
"பத்தாஞ்சலி புடம்"--அஞ்சலியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
"தீனம்" --தளர்ச்சியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
"யாசந்தம்" --மிடுக்குடன் வந்து ப்ரார்த்திப்பவனையும் ரக்ஷிப்பேன்.
"ஶரணாகதம்" --என்னிடத்துக்கு வந்தவனை ரக்ஷிப்பேன்.
"நஹன் யாது ஸ்யாது ஶத்ரும் பரந்தம்"-- அழிக்கும் குணமுள்ள
ஶத்ருவாயினும் காப்பேன் - என்று வால்மீகி ராமபிரானின் திருவுள்ளத்தைக் காட்டுகிறார்.இதனை உதாரணங்களுடன் ஸ்வாமி தேஶிகன் அபயப்ரதான ஸாரத்தில் விஸ்தரித்துள்ளார்.
ஆக எப்படிப்பட்ட ஶரணாகதிக்கும் ரக்ஷணம்உண்டு. எத்திசையும் உழன்றோடிய காகம் ராமன் திருவடி அடைந்ததும், பெண்புறாவைப்பிடித்த வேடன் ஆண்புறா இருந்த மரத்தை அடைந்ததும் முழுமையான ஶரணாகதியாகாவிடினும் காப்பவனின் இடத்தை அடைந்ததே ஶரணாகதியாகிறது. இதை உபசார வழக்கமாகக் கொள்ளலாம். 
மோக்ஷத்துக்கான ஶரணாகதி என்பதுஶாஸ்த்ர ரீதியாக ப்ரார்த்தித்து ஆத்மரக்ஷணப் பொறுப்பை எம்பெருமானிடம்ஸமர்ப்பித்தலே ஆகும்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 14:

आत्मात्मीयस्वरूपन्यसनमनुगतं यावदर्थं मुमुख़्शोः 
तत्वज्ञानात्मकं तत् प्रथममथ विधेः स्यादुपाये समेतम् । 
कैङ्कर्याख्ये पुमर्थेऽप्यनुषजति तदप्यर्थना हेतुभावात् 
स्वाभीष्टानन्यसाध्यावधिरिह तु भरन्यासभागोऽङ्गिभूतः ॥ १४॥

ஸேஷத்வ ஞானம் எல்லா நிலைகளிலும் தொடரவேண்டிய தின் அவ ஶ்யத்தை இந்த ஶ்லோகம் விளக்குகிறது.
ஒருவன் ப்ரபத்திக்கு முன்பும், ப்ரபத்தி அனுஷ்டிக்கும்போதும்,
ப்ரபத்திக்குப் பின்னும் எம்பெருமானுக்கு ஸேஷன் என்ற ஞானத்துடனிருக்க வேணும். இந்த ஞானம் மனதில் தோன்றும் ஒரு சிந்தனை.
ஆத்மஸ்வரூபம்+ஆத்மீயம் (தன்னைச் சேர்ந்த எல்லாவற்றையும்) எம்பெருமானுக்கு உடைமையாக்கி ஒப்படைப்பதை "யானும் நீயே என்னுடைமையும் நீயே" என்கிறார் நம்மாழ்வார்.
தாஸன் என்று நினைப்பது முதல்நிலை. இந்த ஞானத்துடன்
ஆத்மாவை ஒப்படைக்கவேண்டும். இந்த தத்வ ஞானம் வந்த காலத்திலும், உபாய அனுஷ்டான காலத்திலும், பல (phala) அனுபவ காலத்திலும் ஆத்மா எம்பெருமானுக்கு தாஸன் என்ற எண்ணத்துடன் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்க வேணும். உபாய காலத்தில் மட்டுமே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இதுவே பரந்யாஸம்.
"அஸேஷஸேஷதைகரதிரூப" என்று கத்யத்தில் இதனை உடையவர் குறிப்பிடுகிறார். இதுவே அங்கியான பரந்யாஸம் எனப்படுகிறது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 15:

न्यसादेशेषु धर्मत्यजनवचनतोऽकिञ्चनाधिक्रियोक्ता 
कार्पण्यम् वाऽङ्गमुक्तं भजनवदितरापेक्षणं वाऽप्यपोढम् । 
दुःसाधेच्छोद्यमौ वा क्वचिदुपशमितवन्यसंमेलने वा 
ब्रह्मास्त्रन्याय उक्तस्तदिह न विहतो धर्म आज्ञादि सिद्धः ॥ १५॥

எல்லாவற்றையும் செய்யவல்ல எம்பெருமானிடம் ஆத்ம ரக்ஷணமப் பொறுப்பை ஒப்படைக்கும் ஒருவனிடம் எல்லா தர்மங்களையும் விட்டுவிடும்படி சரமஶ்லோகம் கூறுவதன்
விளக்கமே இந்த ஶ்லோகம்.
"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய" - என்ற வசனம் 6 விதமான அர்த்தங்களை அளிக்கிறது என்கிறார் ஸ்வாமி. 
முதல் அர்த்தம்- அகிஞ்சனாதிக்ரியோக்தா-- கர்ம, ஞான, பக்தி யோக தர்மங்களைச் செய்ய முடியாத அகிஞ்சனன்.

2ம் அர்த்தம் - கார்பண்யம் வாங்கமுக்தம்--கைமுதலில்லாத் தன்மையை அநுஸந்தித்துக் கொண்டு எம்பெருமானின் கருணையை ப்ரார்த்திப்பது.

3ம் அர்த்தம் - பஜனவத-- பக்தியோகத்துக்குள்ள தானம்,தபஸ்போன்ற வெளி அங் கங்கள் ப்ரபத்திக்கு வேண்டாம்.

4ம் அர்த்தம் -துஸ்ஸாத் இச்சாத்-- செய்யமுடியாத பக்தியோகத்தைச் செய்யமுற்படும் ஆசையை விடவேண்டும்

5ம் அர்த்தம் - உத்யமௌ--செய்ய முடியாத பக்தியோகத்தைசெய்யும் ப்ரயத்னத்தையும் அடியோடு விட்டுவிடவேணும்.

6ம் அர்த்தம் - ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்த---ப்ரபத்திசெய்யும்போது அதில் நம்பிக்கை குறைந்து வேறு உபாயத்தை நாடினால் ப்ரஹமாஸ்த்ரத்துக்கு வேறு அஸ்த்ரப்ரயோகம் ஒவ்வாதது போல ப்ரபத்தியும் செயலிழக்கும்.

ஆக மேற்சொன்ன 6அர்த்தங்களையும் மனதிலிருத்தி ப்ரபத்திக்கு முன்னும் பின்னும் செய்யவேண்டிய ஆக்ஞா, அனுக்ஞா கைங்கர்யங்களைச் செய்தல் வேண்டும். 
இதற்கான அதிகாரஸங்க்ரஹ பாசுரம் - 

"மூண்டாலும் அரியதனில் முயல் வேண்டா
முன்னம் அதில் ஆசைதனை விடுகை திண்மை*
வேண்டாது சரணநெறி வேறோர் கூட்டு*
வேண்டில் அயன் அத்திரம் போல் வெள்கி நிற்கும்*
நீண்டாகும் நிறை மதியோர் நெறியில் கூடா*
நின் தனிமை துணையாக எந்தன் பாதம் பூண்டால்*
உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற புண்ணியனார்
புகழனைத்தும் புகழுவோமே" 
(அதிகார ஸங் 47)

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
                                                                                                            (to be cont.d)

Tuesday, August 23, 2022

ந்யாஸ த்ரயீ - Part 3 -Nyaasa Vimshati



Shloka 5:

मोक्षोपायार्हतैवं भवति भवभृतां कस्यचित् क्वाऽपि काले
तद्वद् भक्तिप्रपत्त्योरधिकृति नियमस्तादृशा स्यान्नियत्या ।
शक्ताशक्तादि तत्तत्पुरुषविषयतः स्थाप्यते तद्व्यवस्था
यच्चाहुस्तद्विकल्पः सम इति कतिचित् तत् फलस्याविशेषात् ॥ ५॥

இதுவரை ஆசார்யன் அளித்த உபதேசத்தால் நல்ல ஞானமடைந்த சிஷ்யனுக்கு பக்தி, ப்ரபத்தி என்ற இரு உபாயங்களின் தன்மைகளை ஆசார்யன் எடுத்துக்கூறுகிறார் இதில்.
ஶ்ரீவைஷ்ணவன் செய்ய வேண்டிய முக்யமான கார்யம்
ஶரணாகதி. அடுத்த ஜன்மம் இல்லை என்ற கதி. மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி இந்த உபதேசம் மூலம் கிடைக்கிறது. இத்தகுதி எல்லார்க்கும் கிடைப்பதில்லை.கர்ம பலனே இதற்கு மூல காரணம்.ஞானம், சக்தி, சாஸ்த்ர அனுமதி இருந்தால் இத்தகுதி பூர்த்தி யாகும். பக்தியோகம் செய்வதற்கான ஞானமும் சக்தியும் நமக்கில்லை. அது கடின உபாயம். ஶரணாகதி சுலபமானது. 
மற்ற விவஸ்தைகள் தேவைப்படாமையே இதன் சிறப்பு. ஆனால் அடையப் போகும் பலன் இரண்டுக்கும் சமம்.
  1. ஸம்ஸாரிகளுள் யாரோ ஒருவர்க்கு மட்டுமே மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி கிடைக்கும்.
  2. பக்தி/ப்ரபத்தி என்ற இரண்டு அனுஷ்டானங்களால்தான் மோக்ஷம் பெற முடியும். இதில் ஞானம்,சக்தி,சாஸ்த்ர அனுமதி,விளம்ப ஸஹிப்பு (மோக்ஷம் பெற ஏற்படும் கால தாமதம்) இவற்றுடன் செய்வது பக்தியோகம். பாபங்கள் (ஸஞ்சித, ப்ராரப்த) முற்றிலும் ஒழிந்தபின்பே மோக்ஷம் சித்திக்கும். அஞ்ஞாத ஸுஹ்ருதத்தால் நிகழ்வது ஶரணாகதி. இந்த பிறவி முடிவில் மோக்ஷம் கிடைக்கும்
  3. இந்த இரு அனுஷ்டானங்களும் குரு, லகு விகல்பமுடையதாயிருப்பதால் லகு உபாயத்தையே எல்லாரும் செய்வர். ஆனால் பலன் இரண்டுக்கும் சமம்.ஒருவர் இந்த இரண்டையும் அனுஷ்டிக்க சாஸ்த்ரம் அனுமதிக்காது. பக்தி யோகம் தைலதாரை போல இடையீடற்ற த்யானம் செய்யச்சொல்கிறது. க்ருத தாரை போல அல்ல. பஹிரங்க அங்கங்கள் உண்டு. ஶக்தனே இதனைச் செய்யமுடியும். ப்ரபத்தி அஶக்தனுக்கு. இது ஐந்து அங்கங்கள் கொண்ட க்ஷணகால அனுஷ்டானம். ஆக இரண்டின் ஸவரூபங்களும் இரு த்ருவங்களாய் நிலைப்படுகின்றன. திருக்குருகைக் காவலப்பன் பக்தியோகம் செய்து கண்ணனை சாக்ஷாத் கரித்தார். இந்த பக்தி யோகிகளுக்கு பக்தியும், ஞானமும் பிறவிதோறும் தொடரும். ஆனால் நாதமுனிகள், நம்மாழ்வார் கால விளம்பத்தைப் பொறுக்கவில்லை. த்யான ருசியுள்ளவர்களுக்கு விளம்பம் ஒரு பொருட்டல்ல. ஆக மேற்கூறிய நான்கு தகுதியுடையவர் பக்தியோகம் செய்வர். இவற்றில் எதுவுமில்லாதவர் ப்ரபத்திக்கு அதிகாரியாகிறார்.
  4. இப்படி வித்யாசமிருப்பினும் பலன் சமமானது. பரத்தில் இருவருக்கும் அனுபவம் ஒன்றே. பக்தி யோகனுக்கு இகத்தில் பகவதனுபவம் அதிகம். ஶரணாகதனுக்கு பகவதனுபவம் இங்கே குறைவு.
"நாள் இழவு (நஷ்டம்) அன்றி பொருள் இழவு இல்லை" என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼
🌼


Shloka 6:

सानुक्रोशे समर्थे प्रपदनमृषिभिः स्मर्यतेऽभीष्टसिद्ध्यैः 
लोकेऽप्येतत् प्रसिद्धं न च विमतिरिह प्रेख़्श्यते क्वाऽपि तन्त्रे । 
तस्मात् कैमुत्य सिद्धं भगवति तु भरन्यासविद्यानुभावम् 
धर्मस्थेयाः च पूर्वे स्वकृतिषु बहुधा स्थापयांचक्रुरेवम् ॥ ६॥

ப்ரபத்தியின் பெருமையையும்,உயர்வையும் காட்டும் ஶ்லோகம் இது.
  1. கருணையும், சக்தியும் உடையவனிடம் ப்ரபத்தி செய்தால் பலன் கிடைக்கும் என வால்மீகி, வ்யாசர் போன்ற ரிஷிகள் தங்கள் ஸுக்திகளில் சொல்லி யுள்ளனர். லௌகீகமான கார்யம் நிறைவேற ஓரளவு சக்தியும், கருணையும் கொண்ட மனிதனை நம்புகிற நாம் ஸர்வ ஶக்தனாகிய எம்பெருமான் கட்டாயம் பலனளிப்பான் என நம்ப வேணும். லக்ஷ்மணன், பரதன், தண்டகாரண்ய ரிஷிகள், சுக்ரீவன், விபீஷணன், த்ரௌபதி, பாண்டவ ஶரணாதிகள் போன்றவை இதிகாச ப்ரசித்தமானவை.
  2. சக்தியுள்ளவனின் உதவியை கார்ய சித்திக்கு நாடுவது உலக நியதி. ஸாஸ்த்ரங்களும் இதனைத் தடுக்க வில்லை. பரீக்ஷித் நகர்சோதனையில் கலிபுருஷன் பசு ஒன்றை ஹிம்ஸிக்க அவனை வெட்டக்கை ஓங்க, கலி செய்த ஶரணாகதியை ஏற்று அபயம் அளித்து தன்நாட்டை விட்டு ஓடும் படி செய்ததாகவரலாறு. கீதோபதேசம் கேட்ட அர்ஜுனனின் பேரனுக்கே ஶரணாகதி செய்தவனிடம் கருணையிருக்கும்போது எம்பெருமான் விஷயத்தில் சந்தேகமே வேண்டாம்.
  3. ஆக இந்த ஶரணாகதி என்ற ப்ரம்ஹ வித்தையை, தர்ம நிர்ணயம் செய்யும் ஆழ்வார் ஆசார்யர்கள்சொல்லிவைத்துள்ளனர். ஆக இந்த அனுஷ்டானம் பூர்வாசார்யர்கள் ஸ்தாபித்த பரம தர்மமாகும்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼


Shloka  - 7

शास्त्रप्रमाण्यवेदी ननु विधिविषये निर्विशङ्कोऽधिकारी 
विश्वासस्याङ्गभावे पुनरिह विदुषा किं महत्वं प्रसाध्यम् । 
मैवं घोरापराधैर्ः सपदि गुरुफले न्यासमात्रेण लभ्ये 

शङ्का पार्ष्णि ग्रहार्हा शमयितुमुचिता हेतुभिस्तत्तदर्है ॥ ७॥

மஹா விஶ்வாஸத்தின் அவஶ்யத்தைச் சொல்கிறது இந்த ஶ்லோகம்.
முதல் இரு வரிகள் கேள்விகளாகின்றன. அதாவது சாஸ்த்ரங்களை நம்புகின்றவனாக இருப்பவன் அது விதிக்கும் காரியங்களைச்செய்யத் தயங்கமாட்டான் என்னும்போது
அவனுக்கு விஶ்வாஸம் இருக்கிறது என உணரலாம்.
அடுத்த இரு வரிகள் க்ஷணகால அனுஷ்டானமாகிய ப்ரபத்தி அளிக்கும் மிகப்பெரிய பலனில் சந்தேகம் ஏற்படக்கூடியதைத் தவிர்க்க ப்ரபன்னனுக்கு மஹாவிஶ்வாசம் எம்பெருமானிடம்
இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ப்ரபத்தியின் முக்ய அங்கமாக இந்த மஹா விஶ்வாசம் உள்ளது.

இருகையையம் விட்டு க்கதறிய த்ரௌபதியையும், எல்லாம் விட்டு வந்த விபீஷணனையும் காப்பாற்றியது எம்பெருமானிடம் அவர்கள் கொண்ட மஹாவி ஶ்வாஸமே. மாபெரும் நம்பிக்கை என்பதால் இதனைத் தனியான அங்கமாய்ச் சொல்லியுள்ளது.
பாத்ரமறிந்து மோக்ஷபலனைத் தருவதில்லை எம்பெருமான். இப்போதாவது என்னைச் சரணடைந்தானே என்ற கருணையால் உந்தப்பட்டு எம்பெருமான் செய்யும் பரம அனுக்ரஹ
பலன். ஒரேஒருநாள் ஸீதாபிராட்டி ராக்ஷஸிகளிடம் பட்ட அவஸ்தையைப்பார்த்த ஹனுமன் அவர்களைக் கொல்ல
முற்படும்போது 10 மாதமாக தன்னை ஹிம்ஸித்த அவர்களுக்கு கருணை கூர்ந்து அபயமளிக்வில்லையா பிராட்டி! ஆனாலும் கோர பேரபராதங்கள் செய்த நமக்கு இந்த சிறிய க்ஷணகால ப்ரபத்தி மோக்ஷத்தை அளிக்குமா என்ற சந்தேகமானது செய்யவிடாமல் பின்னே இழுக்கும்.
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஸர்வஶக்தனான எம்பெருமான் தன் அபார கருணையாலே இதனைச் செய்கிறான். இந்த விஷயங்களை ஆசார்யன் மூலம் நன்கு தெளிதல் வேண்டும்.


🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 8


नेहाभिक्रान्ति नाशो न च विमतिरिह प्रत्यवायो भवेदिति 
उक्तं कैमुत्य नीत्या प्रपदनविषये योजितं शास्त्रविद्भिः । 
तस्मात् क्षेत्रे तदर्ह सुविदितसमयैर्देशिकैः सम्यगुप्तं 
मन्त्राख्यं मुक्तिबीजं परिणति वशतः कल्पते सत्फलाय ॥ ८॥


மந்த்ர ஜபமும்,நாமஸங்கீர்த்தனமும் ப்ரபத்தியின் மூலமே மோக்ஷம்தர வல்லவை என்பதனை இந்த ஶ்லோகம் வலியுறுத்துகிறது.


பக்தி யோகத்தையும், ப்ரபத்தியையும் ஶாஸ்த்ரங்கள் ஒத்துக்கொண்டுள்ளன. இவை இரண்டும் முடியாதபோது மந்த்ர, நாம கீர்த்தனங்கள் செய்ய வேதம் அனுமதிக்கிறது. தன்வசமின்றி
"ஹரி" என்ற நாமத்தை ஒருவன் சொன்னால் பாபம் விலகும். காட்டில் ம்ருகங்களிடையே அகப்பட்ட ஒருவன் சிம்ஹ கர்ஜனை கேட்ட மாத்ரத்தில் அவற்றினிடமிருந்து தப்பி
விடுபடுவது போல "ஹரி" ஸப்தம் கேட்டால் / சொன்னால் போதும். பாபங்கள் விலகும் என்கிறது சாஸ்த்ரம்.
இன்றைய கால கட்டத்தில் பக்தி யோகம் செய்வதற்கான ஞானம், ஶக்தி நமக்கு கிடையாது. ப்ரபத்திக்கும் முக்ய தேவை "மஹாவிஶ்வாஸம்"
ஸர்வ ஶக்தனும், பரமகாருணிகனுமாகிய எம்பெருமான் என்றும் இதற்கு அடிமையானவன். தான் பெண் என்பதையும், தன்நிலை மையையும், தன்னைச்சுற்றியிருந்த பெரியோர்களையும் தள்ளி
வைத்தது த்ரௌபதியின் மஹாவிஶ்வாஸம். இத்துணை கடினமாகப் பெறும் மஹாவிஶ்வாசத்தைவிட மந்த்ர ஜபம் ஸுலபம். ஆனால் இது ஸாக்ஷாத்தாக பலனைத் தராது.

பகவான் கீதையில் மோக்ஷம் பெற கர்ம, ஞான, பக்தி யோகம் செய்பவன் பாதியில் விட்டானே யாகிலும் பாபமாகாது. பலன்தராமல் போகாது. ஜன்ம வாசனை தொடரச்செய்து பலனளிக்கும். வீண்போகாது என்கிறான். ஆக ப்ரபத்தி விஷயத்திலும் இதேபோன்ற பெருமை இருப்பதை ஸாஸ்த்ரங்கள் கூறுவதைப் பெரியோர்கள் ஸ்தாபிக்கின்றனர்.
உழவுத்தொழிலில் தேர்ந்த உழவன் நல்ல விளைநிலத்தில், தேர்ந்த விதையிட்டு வளர்த்த மரம் நல்ல பழங்களைத் தரும். விதை நேராகப்பழமாகாது. ஆனால்விதை பரிணாமத்தால்
பழமாகிறது.
அதுபோல தேர்ந்த ஆசார்யன் ஸத் ஸிஷ்யனுக்குச் செய்யும் மந்த்ரோபதேசம் அவனுக்கு ஶ்ரத்தை உண்டாக்கிய மஹாவிஶ்வாஸத்தால் மோக்ஷ பலனைப் பெறச்செய்யும். ஆக
மந்த்ரத்தைத் தானே உச்சாடனம் செய்து மோக்ஷம் பெற இயலாது என்று உணர வேண்டும்.
  • இஹ அபிக்ராந்தி நாஶந-- கர்ம யோகத்தில் தொடக்கம் வீணாவதில்லை.
  • இஹ விதி ப்ரத்யயாயச நபவேத் --- கர்மயோகம் நடுவில் தடைப்பட்டாலும் பாபம் ஏற்படாது.
  • இதி உக்தம் --- என கீதை சொல்கிறது.
  • ப்ரபதன விஷயே சாஸ்த்ர வித்பி:யோஜிதம் --- ப்ரபத்தி விஷயத்திலும்  இதேபோல் ஸாஸ்த்ரமறிந்த பெரியோர்களால் பொருத்திப் பேசப்பட்டுள்ளது.
  • தஸ்மாததர்ஹே --- ஆக அந்த உபதேசத்துக்கேற்ப
  • க்ஷேத்ரே ஸுவிதித ஸமயே ---- சேதனனாகிய நிலத்தில் விதைக்கும் காலத்தை நன்கறிந்த 
  • தேஶிகைஸம்யகுப்தம்---- ஆசார்யர்களால் நன்கு விதைக்கப்பட்ட
  • மந்த்ராக்யம் முக்திபீஜம் --- ப்ரபத்தி மந்த்ரமாகிய மோக்ஷ விதை
  • பரிணதி வஶத:--- பக்குவமடைந்து
  • கல்பதேஸத்பலாய-- மோக்ஷமாகிய சிறந்த பலனைத்தர வல்லதாகிறது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 9

न्यासः प्रोक्तोऽतिरिक्तं तप इति कथितः स्वध्वरश्चास्य कर्ता 
अहिर्बुध्न्योप्यन्ववादीदगणि दिविषदामुत्तमं गुह्यमेतत् । 
साक्षान्मोक्षाय चासौ श्रुत इह तु मुधा बाध शङ्का गुणाढ्ये 
तन्निष्टो ह्यन्यनिष्ठान् प्रभुरतिशयितुं कोटिकोट्यंशतोऽपि ॥ ९॥

ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க் காரணமாவதை இந்த ஶ்லோகம்
விளக்குகிறது.
  1. ந்யாஸம் அதிரிக்தமான தபஸ். இதற்குச் சமமானஅனுஷ்டானம் ஏதுமில்லை. ஒருவன் செய்த ஶரணாகதி பல யாகங்கள் செய்ததற்கு ச்சமம்.
  2. சமித் ஸ்தானத்தில் நம: என்ற சொல்லை வைத்துச் செய்வதாக அர்த்தம். ந்யாஸம் அனுஷ்டித்த கர்த்தா நல்லயாகங்கள் (அஶ்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்கள்) செய்ததற்கு ச்சமம். இதையே "ஸ்வத்வர:" என்ற சொல் குறிக்கிறது. "செய்த வேள்வியர்" என்கிறார் ஆழ்வார்.
  3. அஹிர்புத்ஞ ஸம்ஹிதையில் சிவன் ந்யாஸத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சக்ரத்தாழ்வார் பெருமையைப் பேசுகிறார்.
  4. தேவர்களுக்கு மிக உயர்ந்த ரஹஸ்யம்இது. இந்த ஶரணாகதி நமக்கும் கிடைத்துள்ளது. இதுவே அல்ப பலனிலிருந்து மிகப்பெரிய பலனாகிய மோக்ஷம் வரை உபாயமாகிறது என வேதம் சொல்கிறது.
"முமுக்ஷு:ஶரணம் ப்ரபத்யே" என்பது வேதமந்த்ரம். ந்யாஸம் சாக்ஷாத் மோக்ஷோபாயம். பரம்பரையானதல்ல. கர்ம யோகம் செய்தால் மோக்ஷம் ஸாக்ஷாத்தாகக் கிடைக்காது. ஞான, பக்தியோகம் செய்தபின்பே மோக்ஷம். ஆனால் ஶரணாகதி செய்த ஒருவனுக்கு எம்பெருமானின் அபரிமிதமான
ஔதார்ய காருண்ய குணவிஸேஷத்தால் மோக்ஷம் உறுதியாகிறது. 

கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் சொல்வதுபோல் இத்தனை உயர்ந்த மோக்ஷத்தைக் கொடுத்த பின்பும் கொடுத்தது போதாது என எண்ணுபவன் எம்பெருமான்.
ஆக மற்றைய கர்ம ஞான பக்தி யோகத்தை செய்பவரைவிட கோடி கோடி மடங்கு உயர்ந்தவன் ப்ரபன்னன். இவ்விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தன் தேவநாயக பஞ்சாஸத் ஸ்தோத்ரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
"நிஷ்கிஞ்சநத்வ தநிநா விபுதேஶயேந
ந்யஸ்த ஸ்வரக்ஷண பரஸ் தவ பாத பத்மே
நாநாவித ப்ரதித யோக விசேஷ தந்யா:
நார்ஹந்தி தஸ்ய ஶதகோடி தமாம்ஶ கக்ஷ்யாம்" (47)


🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 10

नानाशब्दादिभेदादिति तु कथयता सूत्रकारेण सम्यक् 
न्यासोपासे विभक्ते यजनहवनवच्छब्दभेदादभाक्तात् । 
आख्या रूपादिभेदः श्रुत इतरसमः किञ्च भिन्नोऽधिकारः 
शीघ्रप्राप्त्यादिभिः स्याज्जगुरिति च मधूपासनादौ व्यवस्थाम् ॥ १०॥

ப்ரபத்தி தனிப்பட்ட உபாயமாவதைப் பற்றி க்கூறும் ஶ்லோகம் இது. இது ஸ்ரீபாஷ்ய விஷயமான ஶ்லோகம். ஞான ஶப்தாதி பேதாதி கரணத்திலிருந்து ஸ்வாமி விஷயங்களைக் காட்டியுள்ளார்.
எம்பெருமானார் அருளிய ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம் இரண்டிலும் பக்தியோகமே ப்ராதான்யமாய்ப் பேசப்படுகின்றன. ந்யாஸம் பற்றிய விவரணமில்லையே என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் சூத்ரகாரராகிய வ்யாசர் இதற்குச் சமாதானம் சொல்கிறார்
"நாநா ஶப்தாதி பேதாத்" என்பது சூத்ரம். வேதத்தில் யாகம், ஹோமம், தானம் இவை பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது. 

உதாரணமாக அஶ்வமேதம், ஸோமயாகம் என்றால் ஒவ்வொன்றுக்கும் தனி தேவதை, ரூபம், த்ரவ்யம் உள்ளன. ஹோமம் என்றால் அந்த தேவதைக்கு அக்னி மூலம் நெய் ஆஹூதி செய்ய வேண்டும். எனதல்ல என்ற எண்ணத்துடன் பிறருக்கு ஸமர்ப்பணம் செய்வதில் தானம் பூர்த்தியாகும்.
ஆக இவை ஒவ்வொன்றுக்கும் அந்த வினையைச் (அனுஷ்டானத்தை)
செய்யும் போது ஶப்தங்கள் வேறுபடுகின்றன. 'யஜேத்' என்பது யாகத்துக்கும், 'ஜுஹ்யாத்' என்பது ஹோமத்துக்கும், 'தத்யாத்' என்பது தானத்துக்கும் ஶப்தங்களாகின்றன. ஶப்தத்தையிட்டு பலன் கிடைக்கிறது.
ஸந்த்யாவந்தனம் என்பது அர்க்யம், காயத்ரி, உபஸ்தானம் அடங்கிய ஒரே அனுஷ்டானம். அதேபோல திருவாராதனம் என்பது மந்த்ராசனம், திருமஞ்சனம், அலங்காரம், ஸமர்ப்பணம், நிவேதனம் அடங்கிய ஒரே அனுஷ்டானம்.பக்தி யோகம் செய்பவன் 32 ப்ரும்ஹ வித்தையில் ஏதாவது ஒன்றைப் பற்றி த்யானம் செய்யலாம். 

மதுவித்யா, சாண்டில்ய வித்யா, தகரவித்யா என்பன போன்ற 32 வித்யைகளில் 32 வதாக "ந்யாஸவித்யை" சொல்லப்படுகிறது. மேற்சொன்ன வித்யைகளில் ரூபம், குணம் வேறுபட்டாலும் ஶப்தவேறுபாடில்லை. உபாஸனம் (த்யானம்/வேதனம்) தான் செய்யவேண்டும். ஶரணாகதியில் "ஓமித் யாத்மீய உஞ்சீத்" என விதிக்கிற ஶப்தம் வித்யாசமாயுள்ளது. யாகத்தில் ஞான பாகமும், ஹோமத்தில் அனுஷ்டானமும் முக்யமாவது போல் "எனதல்ல" என்ற த்யாகம் எண்ணம் வந்தால்தான் தானம் பூர்த்தியாகும். இந்த ந்யாஸவித்யைக்கு காருண்ய குணவானாகிய பகவான்ரூபமாயிருந்து கோரின காலத்தில் பலனைத்தருகிறான். 

பக்தியோகம் செய்யமுடியாமையே இதற்கு முக்ய தகுதி. 15 விதமான அதிகாரி (தகுதி) பேதம் ந்யாஸத்துக்குச் சொல்லப்பட்டுள்ளது. மதுவித்யை செய்பவன் சூர்யனை உபாஸித்து தேவலோகத்தில் அஷ்ட வஸுக்களில் ஒருவராக 10யுகங்களிருந்து பின் மோக்ஷமடைவான் என்று சொல்லப்படுகிறது. தகர வித்யா நிஷ்டனுக்கு இதைவிட சீக்ர மோக்ஷம் என்கிறது.
ஆக ந்யாஸம் -- உபாஸனம் இரண்டும் வேறு. இரண்டுக்கும் ஸப்தம் 'ரூபம், பலன், தகுதி வேறானவை.

கீதாபாஷ்யத்தில் பக்திக்கு ப்ரபத்தி ஒரு அங்கம் என்று குறிப்பிட்டாலும், ப்ரபத்தி ஸ்வதந்த்ரமாக மோக்ஷம் தரவல்லது. ஸ்ரீபாஷ்யகாரர் கத்யத்தில் ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க்காரணமாகும் என்று வெளிப்படையாகவே விளக்கியுள்ளார்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
                                                            (to be cont.d)
                          

Wednesday, March 30, 2022

ந்யாஸ த்ரயீ - Part 2- Nyaasa Vimshati



Shloka 3:
सद् भुद्धिः साधु सेवी समुचित चरितस् तत्व बोध अभिलाषी
शुश्रूषुः त्यक्त मानः प्रणिपतन परः प्रश्न काल प्रतीक्षः।
शान्तो दान्त:+अनसूयुः शरणमुपगतः शास्त्र विश्वास शाली
शिष्यः प्राप्तः परीक्षां कृतविद् अभिमतं तत्त्वतः शिक्षणीयः॥ ३

இத்தகைய ஆசார்யனை வந்தடையும் சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்களாக 14 அம்சங்களை ச்சொல்கிறார் ஸ்வாமி தேஶிகன் இந்த 3ம் ஶ்லோகத்தில்.
  • ஸத்புத்தி - நல்ல ஸ்திர புத்தி உள்ளவனாக சிஷ்யன் இருக்க வேண்டும்.
  • ஸாது ஸேவீ - பெரியோர்களை மதிப்பவனாயும், பாகவதர்களோடு பழகும் தன்மை உடையவனாயும் இருக்க வேண்டும். (க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் ஆசார்யனைப் பணிந்து உபதேசம் கேட்க வேண்டும் என அறிவுறுத்தினார்)
  • ஸமுசித சரித: - ஸாஸ்த்ரத்தை யொட்டிய கால தேச வர்த்தமானத்தை அனுசரித்த அனுஷ்டானமும், நல்லொழுக்கமும் உடையவனாக இருக்க வேண்டும்.
  • தத்வபோதாபிலாஷி - தத்வ, ஹித, புருஷார்த்த ஞானத்தை அறியும் ஆசையுடையவனாயிருக்க வேண்டும். தர்மங்களை அறிந்து விசாரம் செய்யும் விருப்பம் (உத்காட இச்சா) உடையவனாயிருக்க வேணும்.
  • ஸுஸ்ரூஷு - ஆசார்யனுக்குப் பணிவிடை செய்யுமுகத்தான் அவரிடம் உபதேசங்களைப் பெற வேண்டும்.
  • த்யக்தமான: - "தான்" எனும் அஹங்காரம் அற்றவனாயிருத்தல். ஞானத்திலும், செல்வத்திலும், வயதிலும் ராமானுஜரை விட உயர்ந்த வராயிருந்த போதும் தன் சிஷ்ய பாவத்தைச் சற்றும் என்றும் மாற்றிக் கொள்ளாத முக்குறும்பறுத்த கூரத்தாழ்வானே சிஷ்ய லக்ஷணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாவார்.
  • ப்ரணிபதந பர - கீழே விழுந்து ஆசார்யனை வணங்குபவனாக ஸிஷ்யன் இருக்க வேண்டும். த்ரிகரணத்தால் சங்கோசமின்றி காலக்ஷேபம் கேட்கும் முன்பும் பின்பும் ஆசார்யனை ஸேவிக்கவைண்டும்.
  • ப்ரஶ்ன கால ப்ரதீக்ஷ: - தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசார்யனிடம் உசிதமான காலத்தை எதிர்நோக்கிக் கேட்டுத் தெளிய வேணும்.
  • ஶாந்த: - சஞ்சலங்களைத் தவிர்த்து மனதை அடக்கியவனாக இருக்க வேணும்.
  • தாந்த: - புற இந்த்ரியங்களை தறிகெட்டுப் போகாமல் அடக்கியவனாயிருக்க வேண்டும். லௌகீக விஷயங்களில் அதிகம் ஈடுபடும்போது வித்தை கற்பதற்கு விருத்தம் ஏற்படும்.
  • அஸூய: - பிறருடைய பெருமையில் பொறாமையும் அதன் மூலம் போட்டியும் ஏற்படக் கூடாது. அவர்களின் குணங்களில் தோஷம் கற்பிக்காதிருக்க வேணும்.
  • ஶரணம் உபகத: - ஆசார்யனைத் தேடிப் போய் சிஷ்யன் பணிய வேணும். ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு ஶரணாகதி செய்து உபதேசம் கேட்க வேணும்.
  • ஶாஸ்த்ர விஶ்வாஸ ஶாலி - ஆசார்யனிடமும் அவர் உபதேசிக்கும் ஶாஸ்த்ர விஷயங்களிலும் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். "ஆயிரம் மாதா பிதாக்கள் சேர்ந்தாலும் ஶாஸ்த்ரம் போன்று ஹிதம் சொல்வதற்குச் சமானமாகாது" என்கிறார் பகவத் ராமானுஜர். ஆசார்யன் செய்யும் ஹிதோபதேசம் பின்னால்தான் சிஷ்யனுக்கு நன்கு புரியும்.
  • ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் - ஆசார்யன் செய்யும் பரீக்ஷைக்குட்பட்டு சிஷ்யனாக வேணும்.
  • க்ருத விது - இவ்விதமாக சிஷ்யனாகிய பின் ஆசார்ய பக்தியுடன் நன்றி மறவாதிருக்கவேணும். க்ருதஞையுடனிருந்தால்தான் ஆசார்ய உபதேசங்கள் மனதில் நிலைக்கும்.
இத்தகைய நல்ல குணவானாகிய சிஷ்யனுக்கு வஞ்சனையின்றி ஆசார்யன் ஸம்ப்ரதாய விஷயங்களை உபதேசிப்பார்.
(1/4 பாகம் உபதேசம், 1/4 பாகம் தானே படிப்பதால், 1/4 பாகம் வாத உரையாடல்களால், 1/4 பாகம் காலக்ரமேண சிஷ்யன் தெரிந்து கொள்வான்)

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 4:

स्वाधीनाशेष सत्ता स्थिति यतन फलं विद्धि लक्ष्मीश मेकं
प्राप्यं नान्यं प्रतीया न च शरणतया कञ्चिदन्यं वृणीयाः।
एतस्मादेव पुंसां भयमितरद् अपि प्रेक्ष्य मोज्झीस् तदाज्ञां
इत्येकान्तोपदेशः प्रथममिह गुरोः एकचित्तेन धार्यः॥ ४||

மோக்ஷத்தை விரும்பித் தன்னை வந்தடைந்த சிஷ்யனுக்கு ஆசார்யன் செய்யும் உபதேசம் பற்றி இந்த ஶ்லோகம் சொல்கிறது.
ஆசார்யன் செய்யும் ரஹஸ்ய ஏகாந்த உபதேசமாகும் இது. மிக ஶ்ரேஷ்டமான திரு அஷ்டாக்ஷரம் த்வயம் சரமஶ்லோகம் ஆகியவற்றின் ஸாரமான அர்த்த விசேஷங்களை உபதேசிக்கிறார்.
(18 முறை நடந்து திருக்கோட்டியூர் நம்பியிடம் ராமானுஜர் கேட்டறிந்தார் இந்த அர்த்தங்களை)
இந்த திருமந்த்ரார்த்தங்கள் நம் ஆத்மாவைக் காட்டித் தருபவை. பெரிய உருவைக் காட்டும் சிறிய கண்ணாடி என்கிறார் ஸ்வாமி தேஶிகன் இதனை. பெரிய விஷயங்களைச் சுருங்கச் சொல்வதே இந்த திருமந்த்ரம். இதனை ஆத்ம யாத்ரை என்பர் தேக யாத்ரை என்பது தேக வளர்ச்சி. ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்வது திருமந்த்ரத்தாலேதான். ஆக ஆசார்யன் செய்யும் இந்த முதல் உபதேசம் பிறந்த சிஸுவுக்கு ப்பாலூட்டுவதற்கொப்பாகும்.

ஆசார்யன் செய்யும் உபதேசங்களாவன-
முதலில் ஶ்ரீய:பதியைத் தெரிந்துகொள்
அவனே ஶ்ருஷ்டி, ஸ்திதி, ப்ருவ்ருத்தியைச் செய்பவனாக ஸர்வ ஸ்வாமியாக உள்ளான். லக்ஷ்மீஸம் ஏகம் என்கிறது வேதம். கொசு முதல் யானை வரை எத்தனையோ விதமான ஜீவராசிகள், தாவரங்கள் இவற்றுக்கு விதவிதமான ஸ்வரூப, ஸ்திதி, ப்ருவ்ருத்தி பேதங்களைக் கொடுக்கிறான் எம்பெருமான்.
திருவாய்மொழியின் முதல் பாசுரம் எம்பெருமான் ஸ்வரூபம் இரண்டாம் பாசுரம் ஸ்திதி மூன்றாம் பாசுரம் ப்ருவ்ருத்தி பலனைச் சொல்கிறது. இவையனைத்தும் அவனது தீனம். அவனே சேஷீ. அவனே ஸ்வாமீ. கூட்டிலே வளர்க்கும் கிளி போன்றவர்கள் நாம். எம்பெருமான் நம்மை உண்டாக்கி, போகங்களை அளித்து ஸந்தோஷிக்கிறான்.
ராஜா வளர்க்கும் கிளிக்கு பட்டு வஸ்த்ரம் கட்டி நகைகள் போட்டு
ரஸிப்பதும் ஸந்தோஷிப்பதும் கிளிக்கு அனுபவமாகாது. ராஜா ஸந்தோஷித்து அனுபவிக்கிறான். இந்த லீலா ரசம் தான் பகவான் அனுபவிப்பது ஜீவன்களிடம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

இரண்டாவது உபதேசம் - இத்தகைய எம்பெருமானை அடைவதே சிஷ்யனின் லக்ஷ்யமாயிருக்க வேண்டும்
ஸ்வதந்த்ரனாயில்லாமல் சூழ்நிலை தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நமக்கே உரிய எம்பெருமானுக்கு கீழ்படிந்திருப்பது நம் ஸ்வரூபத்துக்கு ஏற்புடையதாயிருக்கும். "எருது பரதேசம் போவதுபோல்" என்கிறார் ஸ்வாமி. இதர தேவதைகளை அடைந்தால் எருது படும் கஷ்டம் போன்று நாமும் உழலவேண்டியது புரியும்.

மூன்றாம் விஷயம் - நச ஶரணதயா - அவனை அடைவதை லக்ஷ்யமாய்க் கொண்டால் அவனே உபாயமாயிருந்து அவனை அடையச் செய்கிறான். வேறு தெய்வங்களை நாடவேண்டாம்.

நான்காம் விஷயம் - ஏதஸ் மாதேவ - ஸம்ஸாரத்தில் ஏற்படும்
சுகம்/துக்கம் லாபம்/நஷ்டம் பயம்/அபயம் எல்லாம் தருபவன் அவனே. ஆபத்தைத் தருகின்ற அவனே அபயத்தையும் தருகிறான் "பயக்ருத் பயநாஶன:"

ஐந்தாம் விஷயம் - எம்பெருமானுக்கு அடிமைப்பட்டதாலே அஸாஸ்த்ர விஷயங்களில் ஈடுபடாதிருக்க வேணும். 
அவன் கட்டளையை மீறக்கூடாது.
ஆசார்யன் செய்யும் இந்த உபதேசங்களில் ஒன்றிய மனத்தனாய் பசுமரத்தாணிபோல சிஷ்யன் இவற்றைப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

                                                                                                    (to be cont.d)

🙏🙏🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼🙏🙏

Thursday, March 24, 2022

ந்யாஸ த்ரயீ - Part 1 - Nyaasa Vimshati

                       

பிறவிக் கடலைக் கடத்து விக்கும் நாவாய் ந்யாஸ த்ரயீ!!
(This is the extract from the on-going upanyasam by U.Ve Naavalpaakkam Sri Vasudevachar Swami through GSPK)

ந்யாஸம் என்றால் "பொறுப்புத் துறப்பு" என்று பொருள். மனிதப் பிறவியின் சாதனை எனலாம் இதனை. நிக்ஷேபணம், பரந்யாஸம், ஶரணாகதி என்றும் இதற்குப் பெயர். எல்லா தபஸ்ஸிலும் ஶ்ரேஷ்டமானது இந்த ந்யாஸம் என்ற அனுஷ்டானம் என்கிறது வேதம்.
ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த சாஸ்த்ர, காவ்ய, நாடக, தர்க்க, ஸ்தோத்ர க்ரந்தம் எதுவாயினும் பரந்யாஸம் என்ற கருத்தையே மைய்யமாய்க் கொண்டு விளங்குவதால் "ஓரொன்று தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வானேரப் போமளவும் வாழ்வு" என (ஏதேனும் ஒன்றைக் கற்றறிந்தாலே) மோக்ஷத்தில் ஜீவன்களைக் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்தவை இந்த க்ரந்தங்கள். இந்த அனுஷ்டானத்திற்கென்றே ந்யாஸ தஶகம், ந்யாஸ விம்ஶதி, ந்யாஸ திலகம் என்ற மூன்று க்ரந்தங்களை அருளியுள்ளார் ஸ்வாமி. இம்மூன்றின் தொகுப்பே "ந்யாஸ த்ரயீ."
இவற்றுள் தனிச்சிறப்பு வாய்ந்தது "ந்யாஸ விம்ஶதி". ஶ்ருதி, ஸ்ம்ருதி, ஆழ்வார் ஸுக்த்திகள், ஆகம க்ரந்தங்கள் ஆகியவை கூறும் ப்ரதான விஷயங்களை இந்த ஸ்தோத்ர க்ரந்தம் உள்ளடக்கியுள்ளது. இக்காரணத்தால் அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள் ப்ரார்த்தித்ததற்கிணங்க சுருக்கமான வ்யாக்யானமாக ("திங்மாத்ர ப்ரதர்ஶனம்") ஸ்வாமியே அருளியுள்ளதே அதன் சிறப்பு.
ஶரணாகதி என்ற இந்த அனுஷ்டானத்தை ஓர் நல்ல ஆசார்யனை ஆஶ்ரயித்து அனுஷ்டிக்க வேணும் என வேதம் விதிக்கிறது இதற்கு "நியம விதி"
என்று பெயர். ஆசார்யன் மூலம் கற்கும் வித்தைகளே நிலைத்து நிற்கும். உபநிஷத் சொல்லும் "உப கோசலன்" கதை ஆசார்ய அனுக்ரஹம் ஒரு ஸிஷ்யனை ப்ரகாசப் படுத்துவதையும், ஸிஷ்ய நிஷ்டையையும் தெளிவாய்ச் சொல்கிறது. (இக்கதையை நாவல் பாக்கம் ஶ்ரீ .உ.வே. வாஸுதேவாச்சார் ஸ்வாமியின் "வேதக் கதைகள்" என்ற அரிய புத்தகத்திலிருந்து அறிக)

ந்யாஶ விம்ஶதியின் முதல், இரண்டாம் ஶ்லோகம் ஆசார்ய லக்ஷணம் பற்றியது. ஸதாசார்யன் என்பவர் 14 லக்ஷணங்கள் பொருந்திய வராக இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்வாமியே எடுத்துக்காட்டாக உள்ளார் என்றால் மிகையில்லை.

Shloka 1
सिद्धं सत्-संप्रदाये स्थिर-धियमनघं श्रोत्रियं ब्रह्म-निष्ठं
सत्त्व-स्थं सत्य-वाचं समय-नियतया साधु-वृत्त्या समेतम्।
डम्भ+असूया+आदि-मुक्तं जित-विषयि-गणं दीर्घ-बन्धुं दयालुं
स्खालित्ये शासितारं स्व-पर-हित-परं देशिकं भूष्णु:+र्ईप्सेत्॥ १

ஆசார்ய லக்ஷணங்கள்
  • ஸத்ஸம்ப்ரதாயேஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி,     வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.
  • ஸ்திர தியம்சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.
  • அநகம் - ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்
  • ஸ்ரோத்ரியம் - வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்
  • ப்ரும்ஹ நிஷ்டம் - எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்
  • ஸத்வஸ்த்தம் - ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.
  • ஸத்ய வாசம் - ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.
  • ஸமய நியதயா ஸாது வ்ருத்யா - காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.
  • டம்ப அஸூயாதி முக்தம் - தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.
  • ஜித விஷயி கணம் - இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.
  • தீர்க்க பந்தும் - இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.
  • தயாளும் - மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.
  • ஸாஸிதாரம் - தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)
  • ஸ்வபர ஹிதபரம் - ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
ஆக இந்த குணங்களுடைய ஆசார்யனை ஸிஷ்யன் அணுக வேண்டும். இத்தகைய ஆசார்ய--ஸிஷ்ய சம்பந்தம் கர்மாதீனமாய் ஏற்படுவதல்ல. பூர்வ புண்ய பலத்தால் மட்டுமே கிட்டும்.

இத்தகைய ஆசார்யனை பகவானைத் போல உபாஸிக்க வேணும் என்றும் அதற்கான காரணங்களையும் 2ம் ஶ்லோகத்தில் சொல்கிறார்.
ஸாக்ஷாத் நாராயணனே ஆசார்யனாய் அவதாரம் செய்கிறார் என்கிறது ஸாஸ்த்ரம். பக்தி, ஸ்தோத்ரம், கைங்கர்யம் ஆகியவற்றால் ஆசார்யனை அதிதேஶ்யம் செய்ய வேண்டும். இப்படி ஆசார்யனை உயர்ந்த ஸ்தானத்தில் இருத்துவதன் காரணங்களைப் பட்டியலிடுகிறார் ஸ்வாமி.
ஆசார்யன் செய்யும் உபகாரங்களுக்கு ப்ரத்யுபகாரம் ஸிஷ்யனால் செய்யவே முடியாது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 2

अज्ञान-ध्वान्त रोधाद्+ अघ-परिहरणाद्+ आत्म साम्य+ आवहत्वात्
जन्म-प्रध्वंसि- जन्म- प्रद- गरिमतया दिव्य- दृष्टि- प्रभावात्।
निष्प्रत्यूह+ आनृशंस्यात् नियत- रस-तया नित्य- शेषित्व- योगात्
आचार्यः सद्भिर्+ अप्रत्युपकरण-धिया देववत् स्यादुपास्यः॥ २

ஆசார்யன் செய்யும் உபகாரங்களாவன.
  • அஞானம் என்ற இருட்டைப் போக்கி தத்வ, ஹித, புருஷார்த்தம் என்ற ஆத்ம ஞானத்தை அளிப்பவர் ஆசார்யன்.
  • ஶரணாகதி என்ற அனுஷ்டானத்தைச் செய்வித்து நம் பாவங்களனைத்தையும் அழித்து மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர்.
  • ஞானம், குணம், அனுஷ்டானம் ஆகியவற்றை அளித்து தனக்குச் சமானமாக சிஷ்யனை ஆக்குகிறார்ஆசார்யன். எம்பெருமான் முக்தாத்மாவுக்கு ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் அளிப்பது போல். 
    • ஸாலோக்யம்முக்தனை ஶ்ரீ வைகுண்டலோகத்துக்கு வரவழைத்தல். 
    • ஸாமீப்யம்அத்தனை பரும்ஹாண்டமான ஶ்ரீவைகுண்ட லோகத்தில் அவனுக்கு ஸமீபத்தில் நம்மை இருக்கச் செய்தல் 
    • ஸாரூப்யம்அவனைப்போல அப்ராக்ருதமான ரூபத்தை நமக்குத் தருவது.
    • ஸாயுஜ்யம்இதற்கு மேலே தனக்குச் சமமான ப்ரும்ஹானந்தத்தை நமக்குத் தருவது
    • "தன்னோடொக்கத் தன் தாளிணைக்கீழ் வைக்கும் அப்பன்" என்கிறார் ஆழ்வார். (மதுராந்தகம் பாடசாலையை ஆரம்பித்து நிகழ்த்திய அனுக்ரஹ பாஷணத்தில் இஞ்சிமேட்டழகியசிங்கர் அங்கு கற்கும் வித்யார்த்திகளனைவரும் அழகியசிங்கர்களாக வேணும் என்று ஆசி வழங்கியது ஆசார்யனுக்கே உள்ள பரந்தமனத்துக்கு உதாரணம்).
  • வித்யா ஜன்மம் அளித்து ஆத்ம போஷணம் செய்துபுதுப்பிறவி தந்து இந்த ஸம்ஸார பந்தம் தொடராது காப்பவர் ஆசார்யன். பிதாவாகிய ஆசார்யன், மந்த்ரமாகிய மாதாவினால் ஞானமாகிய புதுப் பிறவியைக் கொடுத்து சிஷ்யனை கடைத்தேறச் செய்கிறார்.
  • எம்பெருமானின் திவ்ய த்ருஷ்டியைப்போல ஆசார்யனும் சிஷ்யனைக் குளிரக் கடாக்ஷித்து அனுக்ரஹிக்கிறார். (ஆளவந்தார் கடாக்ஷம் உடையவர் மேல் படிந்தாற்போல. நடாதூரம்மாள் கடாக்ஷம் ஸ்வாமி தேஶிகன் மேல் விழுந்தாற்போல.) 
  • எம்பெருமான் கருணை எல்லோரிடமும் தடையின்றி செல்வதுபோல் ஆசார்யனின் கருணையும் சிஷ்யனிடம் எல்லையின்றி சுரக்கின்றது.
  • எம்பெருமான் அடியார்களுக்கு என்றும் தெவிட்டாத அமுதமாய் இருப்பது போல் ஆசார்யனும் சிஷ்யர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை அளிக்கிறார்.
  • எம்பெருமானைப் போல ஆசார்யனும் நித்ய ஸ்வாமி யாக உள்ளார் தன் சிஷ்யர்களுக்கு. எம்பெருமானுக்குள்ள ஜீவ சம்பந்தமும் ஆசார்யனுக்குள்ள சிஷ்ய சம்பந்தமும் ஒழிக்க ஒழியாது. இத்தகைய உயர்ந்த ஆசார்யனுக்கு ஸ்வரூபமாக, போக்யமாக, பாக்யமாக கைங்கர்யம் செய்வதே ப்ரத்யுபகாரமாக அமையும்.
                                                                                                       (to be cont.d)
🙏🙏🌼🌼🌼🌷🌷🌷🌸🌸🌷🌷🌸🌸🌷🌷🌷🌸🌸🌼🌼🌼🙏🙏